வியாழன், 1 செப்டம்பர், 2011

பூனையின் சிறுநீரின் மணத்தால் பாலியல் ரீதியில் கவரப்படும் எலிகள்
எலிகள் எவ்வாறு பூனைகளிடம் வசமாக சிக்கிக் கொள்கின்றன என்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூனையின் சிறுநீரின் மணமானது எலிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் காரணியாக இதுவரை கருதப்பட்டது.

ஆனால் ஆண் எலிகள் பூனையின் சிறுநீரின் ரொக்ஸோ பிளாமா இரசாயனத்தை நுகரும் போது அவற்றின் மூளையில் பாலியல் உணர்ச்சி தூண்டப்படுவது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் எலிகளின் மூளையில் அச்சத்தை தோற்றுவிக்கும் பகுதிகளும் செயலிழந்து விடுவதுடன் பயமும் பாலியல் உணர்ச்சியாக மாற்றப்படுகின்றது.

இதனால் எலிகள் பயமிழந்து பூனைகளை நெருங்கி வந்து அவற்றுக்கு இரையாகின்றன.__

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக